கொளித்திவிட்டா என் நெஞ்ச அவ
ஒரு தீக்குச்சியக் கிழிக்காமலே
கொழுந்துவிட்டு அது எறிகையில
மண்ணெண்ணைய மொன்டு ஊத்துரா
ஏனோ ஏனோ நண்பன் செய்யும்
துரோகம் கூட வலிக்கிறதே
இந்த காதல் செய்யும் காயத்தை விடவும்
வலிதாய் நெஞ்சை கிழிக்கிறதே
இந்த நட்பும் அது பொய்தானா
அந்த தீயில் எறிகிற காகிதம்
இந்தப் பொய்யான நட்பினைத் தான்
இத்தனைக் காலம் காட்டினாய்
இந்த நட்புக்கு அடையாலம்
அந்த கர்ணனை கேட்கின்றேன்
இது பொய் நட்பா
நான் செய்தது தப்பா
புரியவில்லை தெரியவில்லை
இந்த நட்பின் இலக்கணம் விளங்கவில்லை
என் நண்பன் அவனை நினைத்தாலே
நெஞ்சம் எங்கும் இனிக்கிறதே
துரோகம் செய்த போதிலும்
என் உயிர் நண்பன் அவன்தானே.......
No comments:
Post a Comment