வானம் பாத்த பூமியில
கல்லு மழை பெய்யயில
வன்னா முகம் வாடையில
வாத்து ரெண்டும் பேசிக்குது
வெள்ளம் வர போகுதுன்னு
கண்ணுக்குள்ள வச்சிருந்த
ஈரம் எல்லாம் தீந்திடுச்சே
இந்த மழை வந்து நின்னா
நாத்தில் உள்ள முத்தயெல்லாம்
கடன் வாங்கி சேத்துக்குவ
அந்த வீடு இந்த வீடு
மாத்தி மாத்தி ஓடி ஓடி
கண்ணில் பட்ட முத்தயெல்லாம்
போட்டி போட்டு சேக்குது
இந்த பிஞ்சு மனம்
இந்த மழை போதாதுன்னு
வயல் வரப்பு காத்திருக்கு
இன்னும் கொஞ்சம் வேணுமுன்னு
குளக்கரையும் வேண்டிருக்கு
வெள்ளம் வர காணமுன்னு
வாத்து கூட ஏங்கிடிச்சி
No comments:
Post a Comment