Friday, 30 November 2012

அழகு தான்

பக்கத்து வீட்டு தேவதை

பார்ப்பதற்கு அழகு தான்

பட்டாம்பூச்சி சிறகுகள்

பறக்க பறக்க அழகு தான்


உயிரை கொல்லும் பசியிலே

உணவு இருந்தால் அழகு தான்

உண்மை சொல்ல துனிந்தவன்

ஊமை என்றால் அழகு தான்


காதல் உள்ள மனதிலே

கவிதை சொன்னால் அழகு தான்

களவு என்னும் தொழிலிலே

கள்வர் எல்லாம் அழகு தான்


ஆழிப் பெரும் அலையிலே

அலையும் மீன்கள் அழகு தான்

ஆடை அது பாலிலே

அடியில் இருந்தால் அழகு தான்


கவிதை புனைந்த என்னிடம்

கருத்தை சொன்னால் அழகு தான்

கவிஞர் இவன் எனக் கூறி

கற்களை வீசினால் அழகுதான்

வேண்டாம் வேண்டாம்

காதல் காதல்

அது கனவிலும் வேண்டாம்

கண்களின் உறக்கம்

அது பறித்திடும் வேண்டாம்


பதுமைகள் பேசும்

அந்த முதுமைகள் வேண்டாம்

பொய்கள் பேசும்

அந்த உண்மைகள் வேண்டாம்


கவிதைப் புணையும்

அந்த சிந்தனை வேண்டாம்

கற்பனை உலகில்

அந்த தவிப்புகள் வேண்டாம்


கல்லறை கண்களில்

அவள் மிரட்டலும் வேண்டாம்

நண்பனை மறந்திடும்

இந்த காதலும் வேண்டாம்

விருப்பம் இல்லை

இந்த பூமியே பொய் தானடி

நீ இல்லையேல் நான் ஏதடி

அந்த புவி அதனின் ஈர்ப்பதனை

மரம் செடிகள் மதிப்பதில்லை

மேலோங்கியே வளர்ந்தன

என் காதலைப் போல


உறவதினில் நாட்டம் இல்லை

பணம் பொருளை எதிர்பார்க்கும்

மதம் அதனை மதிப்பதில்லை

காதல் எனும் கடவுளால்


கனவு காண விரும்பவில்லை

தூக்கம் அதை தருவதால்

கைபேசியில் விருப்பமில்லை

உன் முகம் காட்ட மறுப்பதால்


இரவதினில் விருப்பம் இல்லை

நீ உறங்கச் செல்வதால்

மின் தடையில் விருப்பமில்லை

உன் கனவை கலைப்பதால்

காதல் சொல்ல விருப்பமில்லை

தினம் தினம் நீ மறுப்பதால்………..!

Monday, 26 November 2012

நான் அவள் மாமன் அல்ல

காதல் அது

கண்கள் அதை

கைது செய்தது

ஓடி வந்து கேட்கும் முன்னே

என் நெஞ்சை கொய்தது


என் காதல்

அதை உன்னிடமே

நான் தந்தேன்

இனி உறக்கமில்லை என் கனவதிலும்

இதயம் இடம் மாறியதால்


தாயின் சாடலால்

கேட்கும் கீதமதை

மாற்றும் இசையாய்

உன் தேகம் அது பாடும்

கீதம் அதை கேட்டேன்


நீ பேசும்

வார்த்தை எல்லாம்

கவிதைகள் ஆவதால்

கவியரசும் என்னிடம் புலம்பி நின்றான்

நீ பேசுவதை நிறுத்தச் சொல்லி


மெட்டி ஒலி

கால்கள் அதில்

கேட்க ஆசை என்றேன்

மாதம் தள்ளி மாமனுடன்

மணம் முடிந்தால் ஒலி கேட்கும் என்றாள்.!!!!!!!!!!!!!!!!!!!!!!

Tuesday, 20 November 2012

அறியாமையின் ஆசை



மழை துளியின் ஓசை

காதில் விழ ஆசை

குளிர் தந்திடும் காற்று

என் தேகம் தொட ஆசை


என் ஆசை நடந்திடவே

கல்லாகிய கடவுளிடம் சென்றேன்

என் ஆசை அதை சொன்னேன்

சில தினங்கள் சென்றதும்

பூசை அது நடந்தது

மழை அதனை வேண்டி

அன்று தெரிய வந்தது

இறைவன் செவி மந்தமே

பூசாரியின் செவி கூர்மை என்று


அன்று இரவே

கடவுள் அவன்

கனவில் வந்தான்

நான் சற்று உரக்கவே பேசினேன்

அவன் மெதுவாக சொன்னான்


“மழை என்  Department இல்ல

நீ போய் இவன பாரு”


என்று மற்றும் ஒரு

கோவிலுக்கு வழியை சொன்னான்


அன்று விடிந்ததும்

அந்த கோவிலின் வழி

நினைவில் இருந்தது

விரைவாக சென்று சேர்ந்தேன்

பாதி அழிந்த நிலையில்

ஒரு காடு தெரிந்தது

கோவிலின் சுவடு எதுவும் இல்லை

இருந்தும் அழைத்தேன் மழைக் கடவுளை


என்ன வேண்டும் என்றான்

கண்ணில் படாமலே

மழை வேண்டும் என்றேன்


“Stock இல்லை என்றான்”


விடவில்லை நான்

காற்றாவது வேண்டும் என்றேன்

கவிதை சொன்னான்



“வெட்டப்படுவது நாங்கள்

குட்டப்படுவது நீங்கள்

வெட்டுவதை நிறுத்துங்கள்

கொட்டுகிறேன் மழையாய்”



அப்போது உணர்ந்தேன்
 
என்னிடம் பேசியது
 
வெட்டப்பட்ட மரங்கள் என்று

Wednesday, 7 November 2012

காஞ்சிபுரம்



வாரத்தின் முதல் நாள்

அலுவலகம் செல்ல

அவசரமாய் தயாராகி

சாப்பிடும் வேளையில்

நினைவில் வரும் கோவில் (காஞ்சிபுரம்) இட்லி

உணவகத்தை நாடிச் செல்ல தூண்டும்


பேருந்து நிலையம் செல்ல

மிதிவண்டியை அதிவேகமாய் இயக்கும் போது

வழி எங்கும் கோவில்கள்

வேகத்தடையாய் வந்து நிற்க்கும்

விட்டு செல்ல மனம் இன்றி

சற்றே நின்று வணங்கிச் செல்வேன்


பேருந்து ராஜ வீதிகளை கடக்கும் போது

கண்ணில் பளிச்சென தென்படும்

கலை நயம் மிக்க ராஜகோபுரங்கள்

பெருமை அடைய செய்யும்

இந்த கோவில் நகரத்தில்

நான் பிறந்ததை எண்ணி


இந்த கோவில் நகரத்தின்

எல்லையை கடக்கும் போது

மனம் சற்று கலங்கத் தான் செய்யும்

அறிஞர் அண்ணாவின் நினைவு தூன் கண்டு

இருந்தும் பெருமை தான் எனக்கு

அவரை போல் முதல்வரை

இந்த நாட்டுக்கு தந்தது

என் காஞ்சிபுரம் தானே......!

காதல் வாசம்

உன் தேகம் தாலாட்ட

நெஞ்சம் தேன் ஊட்ட

மொய்க்கும் வண்டாக மாறினேன்

உயிர் பூவை எங்கெங்கும் தேடினேன்


உயிர் பூவை தொலைத்தேனே

காதல் மறந்தேனே

பூமி இரண்டானது

என் காதல் துண்டானது


பூக்கும் பூக்களுக்கு

வாசம் கொண்டு வரும்

சிறு வண்டு அதன் மேல்

கொண்ட காதல் தான்


இந்த பெரிய பூமிதனில்

பூக்கள் கொண்டு வரும்

வாசம் இங்கு பல ஆயிரங்கள்

உன் வாசம் தேடி வந்து

வண்டாய் அலைகின்றேன்

என் காதல் பெற்று

நீ வாசம் தருவாயா


இந்த பூமி சிறிது தான்

நம் காதல் பெரிது தான்

தேடி வருவாயா – மாற்றாய்

என்னை தேட விடுவாயா……!

மின்னியல் காதல்

என் அன்பே

நீ ஒரு மின் சுற்றா

நான் வரவா

இனி நான் மின்சாரம்


அடி பெண்ணே

நீ என்ன மின்தடையா

நான் வரவா

இனி நான் காற்றாலை


கொடி மலரே

நீ என்ன மின்னேற்றமா

நான் வரவா

இனி நான் மின்தேக்கி


துளி நீரே

நீ என்ன மின் புலமா

நான் வரவா

இனி நான் இடிதாங்கி


சிறு துகளே

நீ என்ன அணு உலையா

நான் வரவா

இனி நான் யுரேனியம்


சுடும் காற்றே

நீ என்ன கரும் புகையா

நான் வரவா

இனி நான் மின்னோடி…..!

Wednesday, 24 October 2012

தாலாட்டு


சின்ன சின்ன கண்ணுக்குள்ள

நித்தம் நித்தம் நித்திரையை


கொண்டு வந்து சேர்க்க தானே ஆசை



அந்த வானம் வந்து

உன் முகத்தை பாத்துப்புட்டு


வெண்ணிலவே வேணாமுன்னு போகும்


நிலா சோறு ஊட்டிடவே


அந்த வெண்ணிலவு


வேணும் நீயும் தூங்கு


கண்ண மூடி தூங்கு



குட்டி குட்டி எறும்பெல்லாம்

உன்ன சுத்தி நின்னுகிட்டு


கண்ணா மூச்சி ஆட தானே ஏங்கும்


அதன் அம்மா வந்து தேடிடுமே


சிட்டெறும்பு வீடு போகனுமே


நீயும் கொஞ்சம் கண்ண மூடி தூங்கு



ஊரில் உள்ள காத்து எல்லாம்

உன்ன தேடி வந்துடுது


நீ தூங்கலன்னு சேதி ஒன்ன கேட்டு


காற்றாலை அது நின்னுடுச்சே


காத்து இங்க வந்ததால


மின் விசிறி இரவில் ஓடனுமே


நீயும் கொஞ்சம் கண்ண மூடி தூங்கு…….!


Friday, 19 October 2012

என் தந்தை



பூமி சற்று சிறிதுதான்

கடலும் இங்கு குட்டைதான்

ககோளம் கூட நுண்மை தான்

என் தந்தை அன்பு காட்டினால்
 

சின்ன சின்ன தவறுகள்

சிறு வயதில் நான் செய்திட

என்னை சாட மனமின்றி

தாயை சாடி சென்றிடுவார்


வீட்டில் செய்யும் பண்டங்களை

ருசி பார்க்க கூட தவறிடுவார்

பிடிக்கவில்லை என்று அல்ல

எனக்கு பிடிக்கும் என்பதால்


பொங்கல் தீபாவளி நாட்களில்

சராசரி இன்பத்தை கூட

எனது தந்தை அடைய மாட்டார்

புத்தாடை பட்டாசு எனக்கு

புது பனியனை மட்டும்

வாங்கி கொள்வார் தனக்கு


பத்தாவது தேர்வில்

நல்ல பதிப்பெண் எனக்கு

என்னை விட

என் தந்தை அடைந்த

இன்பத்திற்கு அளவே இல்லை


இப்படிப்பட்ட என் தந்தையை

அவர் இனி வாழும் நாட்களில்

இன்பத்தை மட்டுமே நான் கொடுக்க

இந்த கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.....!



Thursday, 18 October 2012

போர் வீரன்



காலம் காலம் சென்று

எம் மக்கள் உறங்கும் போதும்

அந்த கனவிலும் கூட


என் நாட்டில் அமைதி நிலைத்திட வேண்டும்




போர் அது புணரும் போதும்


கைகளில் ஆயுதம் ஏந்தி


எதிரியை வீழ்த்திடும் போதும்


என் மக்கள் என்னிடம் வந்து


போர் நடந்ததா என்று வினவிட வேண்டும்




நரகத்தின் பிடியில் சிக்கி


சொர்கம் அழிந்திடும் போதும்


கடவுள்கள் கூடி பேசி


உயிரை காத்திட வேண்டி


என் நாட்டில் தஞ்சம் அடைந்திட வேண்டும்




தாயிடம் பாசம் கொண்டு


அவள் முகத்தை ஒருமுறை பார்க்க


விடுப்பில் சொந்த ஊர் சென்று


அவள் முன்னே நின்றிடும் போது


ஏன் வந்தாய் என்று சாடிட வேண்டும் ........!