Monday, 26 November 2012

நான் அவள் மாமன் அல்ல

காதல் அது

கண்கள் அதை

கைது செய்தது

ஓடி வந்து கேட்கும் முன்னே

என் நெஞ்சை கொய்தது


என் காதல்

அதை உன்னிடமே

நான் தந்தேன்

இனி உறக்கமில்லை என் கனவதிலும்

இதயம் இடம் மாறியதால்


தாயின் சாடலால்

கேட்கும் கீதமதை

மாற்றும் இசையாய்

உன் தேகம் அது பாடும்

கீதம் அதை கேட்டேன்


நீ பேசும்

வார்த்தை எல்லாம்

கவிதைகள் ஆவதால்

கவியரசும் என்னிடம் புலம்பி நின்றான்

நீ பேசுவதை நிறுத்தச் சொல்லி


மெட்டி ஒலி

கால்கள் அதில்

கேட்க ஆசை என்றேன்

மாதம் தள்ளி மாமனுடன்

மணம் முடிந்தால் ஒலி கேட்கும் என்றாள்.!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment