Wednesday, 7 November 2012

காதல் வாசம்

உன் தேகம் தாலாட்ட

நெஞ்சம் தேன் ஊட்ட

மொய்க்கும் வண்டாக மாறினேன்

உயிர் பூவை எங்கெங்கும் தேடினேன்


உயிர் பூவை தொலைத்தேனே

காதல் மறந்தேனே

பூமி இரண்டானது

என் காதல் துண்டானது


பூக்கும் பூக்களுக்கு

வாசம் கொண்டு வரும்

சிறு வண்டு அதன் மேல்

கொண்ட காதல் தான்


இந்த பெரிய பூமிதனில்

பூக்கள் கொண்டு வரும்

வாசம் இங்கு பல ஆயிரங்கள்

உன் வாசம் தேடி வந்து

வண்டாய் அலைகின்றேன்

என் காதல் பெற்று

நீ வாசம் தருவாயா


இந்த பூமி சிறிது தான்

நம் காதல் பெரிது தான்

தேடி வருவாயா – மாற்றாய்

என்னை தேட விடுவாயா……!

No comments:

Post a Comment