Tuesday, 20 November 2012

அறியாமையின் ஆசை



மழை துளியின் ஓசை

காதில் விழ ஆசை

குளிர் தந்திடும் காற்று

என் தேகம் தொட ஆசை


என் ஆசை நடந்திடவே

கல்லாகிய கடவுளிடம் சென்றேன்

என் ஆசை அதை சொன்னேன்

சில தினங்கள் சென்றதும்

பூசை அது நடந்தது

மழை அதனை வேண்டி

அன்று தெரிய வந்தது

இறைவன் செவி மந்தமே

பூசாரியின் செவி கூர்மை என்று


அன்று இரவே

கடவுள் அவன்

கனவில் வந்தான்

நான் சற்று உரக்கவே பேசினேன்

அவன் மெதுவாக சொன்னான்


“மழை என்  Department இல்ல

நீ போய் இவன பாரு”


என்று மற்றும் ஒரு

கோவிலுக்கு வழியை சொன்னான்


அன்று விடிந்ததும்

அந்த கோவிலின் வழி

நினைவில் இருந்தது

விரைவாக சென்று சேர்ந்தேன்

பாதி அழிந்த நிலையில்

ஒரு காடு தெரிந்தது

கோவிலின் சுவடு எதுவும் இல்லை

இருந்தும் அழைத்தேன் மழைக் கடவுளை


என்ன வேண்டும் என்றான்

கண்ணில் படாமலே

மழை வேண்டும் என்றேன்


“Stock இல்லை என்றான்”


விடவில்லை நான்

காற்றாவது வேண்டும் என்றேன்

கவிதை சொன்னான்



“வெட்டப்படுவது நாங்கள்

குட்டப்படுவது நீங்கள்

வெட்டுவதை நிறுத்துங்கள்

கொட்டுகிறேன் மழையாய்”



அப்போது உணர்ந்தேன்
 
என்னிடம் பேசியது
 
வெட்டப்பட்ட மரங்கள் என்று

No comments:

Post a Comment