Thursday, 18 October 2012

போர் வீரன்



காலம் காலம் சென்று

எம் மக்கள் உறங்கும் போதும்

அந்த கனவிலும் கூட


என் நாட்டில் அமைதி நிலைத்திட வேண்டும்




போர் அது புணரும் போதும்


கைகளில் ஆயுதம் ஏந்தி


எதிரியை வீழ்த்திடும் போதும்


என் மக்கள் என்னிடம் வந்து


போர் நடந்ததா என்று வினவிட வேண்டும்




நரகத்தின் பிடியில் சிக்கி


சொர்கம் அழிந்திடும் போதும்


கடவுள்கள் கூடி பேசி


உயிரை காத்திட வேண்டி


என் நாட்டில் தஞ்சம் அடைந்திட வேண்டும்




தாயிடம் பாசம் கொண்டு


அவள் முகத்தை ஒருமுறை பார்க்க


விடுப்பில் சொந்த ஊர் சென்று


அவள் முன்னே நின்றிடும் போது


ஏன் வந்தாய் என்று சாடிட வேண்டும் ........!


No comments:

Post a Comment