காலம் காலம் சென்று
எம் மக்கள் உறங்கும் போதும்
அந்த கனவிலும் கூட
என் நாட்டில் அமைதி நிலைத்திட வேண்டும்
போர் அது புணரும் போதும்
கைகளில் ஆயுதம் ஏந்தி
எதிரியை வீழ்த்திடும் போதும்
என் மக்கள் என்னிடம் வந்து
போர் நடந்ததா என்று வினவிட வேண்டும்
நரகத்தின் பிடியில் சிக்கி
சொர்கம் அழிந்திடும் போதும்
கடவுள்கள் கூடி பேசி
உயிரை காத்திட வேண்டி
என் நாட்டில் தஞ்சம் அடைந்திட வேண்டும்
தாயிடம் பாசம் கொண்டு
அவள் முகத்தை ஒருமுறை பார்க்க
விடுப்பில் சொந்த ஊர் சென்று
அவள் முன்னே நின்றிடும் போது
ஏன் வந்தாய் என்று சாடிட வேண்டும் ........!
No comments:
Post a Comment