Tuesday, 16 October 2012

ஆடை

உலகம் பிறந்த அந்த நொடி
கடவுள் படைத்த மனிதனிடம்
சிறிதும் இல்லை பொறியுணர்வு
சுற்றி திறியும் பகலவனின்
அதியுட்டனம் கூட தெரியாமல்
மானம் இன்றி அம்மனமாய்
பூமிதன் மடியில் கொண்ட மனிதனிடம்
சித்திரையின் பெயரான
ஆடை எனும் அனிகலனை
மானம் காக்க கடவுள் தந்தான்


இலை தழையாய் தோன்றியது
விலாவையும் தொடையும் பிரித்து
அரங்கேற்றம் செய்து கொண்டது
புதியதொரு முயற்சியாய்
கலவி எனும் கலையை
மனித இனம் அறிந்து கொள்ள
ஆண்பால் பெண்பால் உருவானது


ஆணும் பெண்ணும் சேர்ந்து வர
பிரித்தறிய இயலாமல்
மக்கிப் போன மனித இனம்
கண்டறிந்த இன்னும் ஒரு ஆடை
பெண் பாலரின் மானம் காக்க
இவ்வுலகம் பற்றிக்கொண்ட
இடுப்பு மேல் ஆண்ட மேலாடை


காலம் காலம் கடந்தோட
இலை தழைகள் நூலாக
பின்னொரு காலத்தில்
நூலது நூலாடையாய் மாற
வேட்டி எனும் ஆணுடையும்
சேலை எனும் பெண்ணுடையும்
ஆடை இலக்கணமாய் உருவானது


இலக்கணம் அது இன்னல் பெற
வேட்டி அது கிழிந்து விட
கால்சட்டை உருவானது
சேலை அதை சுமந்திட
பெண்கள் இனம் வெறுத்ததால்
மாற்றம் கொண்ட பெண் கால்சட்டை
சுடிதாராய் உருவானது


இத்தனை பரிமானங்களில்
வளர்ந்த ஆடை அதை
உலகம் பிறந்த அந்த நொடியை
நோக்கி வழிநடத்தும்
மாந்தர் இனம் வாழ்க பல்லாண்டு……!

No comments:

Post a Comment