Friday, 19 October 2012

என் தந்தை



பூமி சற்று சிறிதுதான்

கடலும் இங்கு குட்டைதான்

ககோளம் கூட நுண்மை தான்

என் தந்தை அன்பு காட்டினால்
 

சின்ன சின்ன தவறுகள்

சிறு வயதில் நான் செய்திட

என்னை சாட மனமின்றி

தாயை சாடி சென்றிடுவார்


வீட்டில் செய்யும் பண்டங்களை

ருசி பார்க்க கூட தவறிடுவார்

பிடிக்கவில்லை என்று அல்ல

எனக்கு பிடிக்கும் என்பதால்


பொங்கல் தீபாவளி நாட்களில்

சராசரி இன்பத்தை கூட

எனது தந்தை அடைய மாட்டார்

புத்தாடை பட்டாசு எனக்கு

புது பனியனை மட்டும்

வாங்கி கொள்வார் தனக்கு


பத்தாவது தேர்வில்

நல்ல பதிப்பெண் எனக்கு

என்னை விட

என் தந்தை அடைந்த

இன்பத்திற்கு அளவே இல்லை


இப்படிப்பட்ட என் தந்தையை

அவர் இனி வாழும் நாட்களில்

இன்பத்தை மட்டுமே நான் கொடுக்க

இந்த கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.....!



No comments:

Post a Comment