பூமி சற்று சிறிதுதான்
கடலும் இங்கு குட்டைதான்
ககோளம் கூட நுண்மை தான்
என் தந்தை அன்பு காட்டினால்
சின்ன சின்ன தவறுகள்
சிறு வயதில் நான் செய்திட
என்னை சாட மனமின்றி
தாயை சாடி சென்றிடுவார்
வீட்டில் செய்யும் பண்டங்களை
ருசி பார்க்க கூட தவறிடுவார்
பிடிக்கவில்லை என்று அல்ல
எனக்கு பிடிக்கும் என்பதால்
பொங்கல் தீபாவளி நாட்களில்
சராசரி இன்பத்தை கூட
எனது தந்தை அடைய மாட்டார்
புத்தாடை பட்டாசு எனக்கு
புது பனியனை மட்டும்
வாங்கி கொள்வார் தனக்கு
பத்தாவது தேர்வில்
நல்ல பதிப்பெண் எனக்கு
என்னை விட
என் தந்தை அடைந்த
இன்பத்திற்கு அளவே இல்லை
இப்படிப்பட்ட என் தந்தையை
அவர் இனி வாழும் நாட்களில்
இன்பத்தை மட்டுமே நான் கொடுக்க
இந்த கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.....!
No comments:
Post a Comment