Wednesday, 24 October 2012

தாலாட்டு


சின்ன சின்ன கண்ணுக்குள்ள

நித்தம் நித்தம் நித்திரையை


கொண்டு வந்து சேர்க்க தானே ஆசை



அந்த வானம் வந்து

உன் முகத்தை பாத்துப்புட்டு


வெண்ணிலவே வேணாமுன்னு போகும்


நிலா சோறு ஊட்டிடவே


அந்த வெண்ணிலவு


வேணும் நீயும் தூங்கு


கண்ண மூடி தூங்கு



குட்டி குட்டி எறும்பெல்லாம்

உன்ன சுத்தி நின்னுகிட்டு


கண்ணா மூச்சி ஆட தானே ஏங்கும்


அதன் அம்மா வந்து தேடிடுமே


சிட்டெறும்பு வீடு போகனுமே


நீயும் கொஞ்சம் கண்ண மூடி தூங்கு



ஊரில் உள்ள காத்து எல்லாம்

உன்ன தேடி வந்துடுது


நீ தூங்கலன்னு சேதி ஒன்ன கேட்டு


காற்றாலை அது நின்னுடுச்சே


காத்து இங்க வந்ததால


மின் விசிறி இரவில் ஓடனுமே


நீயும் கொஞ்சம் கண்ண மூடி தூங்கு…….!


No comments:

Post a Comment